செவ்வாயன்று மைத்திரியை காணும் நவாஸ் ஷெரீப்

215

 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர், இந்த அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.

திங்கட்கிழமை மாலை கொழும்பு வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான பேச்சுக்கள், அதிபர் செயலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

நவாஸ் ஷெரீப் தனது பயணத்தின் இறுதி நாளான வரும் புதன்கிழமை கண்டிக்குச் சென்று தலதா மாளிகை மற்றும் பள்ளிவாசலில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

SHARE