ஜெனிவாவை கலக்கும் பிச்சைக்காரர்கள்!

202

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

ஜெனிவாவில் தடை மீறி பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜெனிவாவில் பிச்சை எடுக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது நினைவுக் கூரதக்கது. சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த எட்டு வருடங்கள் குறித்த சட்டம் அமலில் இருந்தாலும் கால்வின் நகரத்தின் தெருக்களில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கைவிடவில்லை.

கடந்த ஆண்டு மட்டும் 5739 பேர் சட்டத்தை மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்று கூறுகையில், பிச்சைகாரர்கள் அதிகரிப்புக்கு காரணம் கட்டுப்பாடுகளில் உள்ள இறுக்கமா? அல்லது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பா? என கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றவாளிகளுக்கு அபராதம் செலுத்த வழி இல்லாததால் அரசுக்கு இதனால் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது.

SHARE