டொனால்ட் ட்ரம்ப்பை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் தமிழ் நண்பன்!

139

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமானவரான ஷலாபா ஷல்யகுமார் என்பவர் விரைவில் இலங்கை வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தொழிற்சாலை துறைக்கு தொடர்புடைய வர்த்தகர் என கூறப்படுகின்றது. அத்துடன் அவர் இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துனுக்கு நெருக்கமானவராகும்.

தமிழ் திரைப்பட இயக்குனரான சந்திரன் ரத்னம் என்பவர் டொனால்ட் ட்ரம்பை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இயக்கிய “கோஸ்ட் கான்ட் டூ இட்” என்ற திரைப்படத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வரகூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

SHARE