சீனாவில் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்ஸி பிரதேசத்தில் குடியிருந்து வருபவர் 13 வயதான Guo.
இவரது பெற்றோர் மண முறிவு பெற்றதை அடித்து சிறுமி Guo தனது சித்தி வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சித்தியின் வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை, சில நாட்கள் தங்களது சொந்த கிராமத்தில் தங்கியிருக்கும்படி மகளை அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து தந்தையுடன் சென்ற சிறுமி Guo திரும்பி சித்தி வீட்டிற்கு வந்தபோது உற்சாகம் இழந்தும் அதிர்ச்சியடைந்தும் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து வினவிய சித்தியிடம், தமது தந்தை தன்னை 2 முறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சிறுமியை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதை அடுத்து சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தங்களது குடியிருப்பின் 36 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றத்திற்காக சிறுமியின் தந்தை தண்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. |