தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் – டக்ளஸ் தேவானந்தா

92

புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். இது  தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியும் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் அரசியல் அமைப்புச் சபையின் வழிநடத்தல் குழு பிரதமர் தலைமையில் கிட்டத்தட்ட 80 தடவைகளுக்கு மேல் கூடியுள்ளது. இறுதியாக நடந்த சந்திப்பில் நான் கூறிய விடையம் புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என்பது அர்த்தமல்ல. உண்மையில் ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியே. இது தமிழ் மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் செயல் எனவும் நான் கூறியிருந்தேன். அதனை ஏற்றுக் கொண்டு டக்ளஸ் தேவானந்தா கூறுவதில் நியாயம் இருக்கின்றது. என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

ஆனால் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் என்னை கேட்கிறார் நாட்டை பிரிக்கபோகிறீர்களா? நாட்டை குழப்பப் போகிறீர்களா? என நான் அவரிடம் திருப்பி கேட்டேன். நான் மக்களை உசுப்பேத்தவில்லை. நீங்கள்தான் மக்களை உசுப்பேத்தினீர்கள். எதற்காக மக்களை உசுப்பேத்தினீர்கள்? எனக் கேட்டேன்.

அப்போது பிரதமர் ரணில் தலையிட்டு தமிழ் மொழில தெரியாவிட்டாலும் ஏதோ பிரச் சினை உள்ளது. என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.

ஆகவே தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களை அழைத்து பேசி தீர்மானிக்கலாம் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் ஊடாகங்கள் ஒருபக்க கருத்துக்களை மட்டும் செய்தியாக்குகின்றன. ஆனால் எங்களுடைய பக்கத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை என்றார்.

SHARE