தவராசா மரணத்திற்கு காரணம் நிமோனியா காய்ச்சல்

230
காரைநகர் களபூமியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையின் மரணத்திற்கு காரணம் நிமோனியா காயச்சல் என மரண விசாரணையைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் களபூமியைச் சேர்ந்த கார்த்திகேசு தவராசா என்பவர் கடந்த 14ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு காரைநகரில் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஊர்காவற்துறை பொலிஸார் சடலத்தை பொறுப்பேற்று 17ம் திகதி இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து நிமோனியா காய்ச்சலினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு சடலம் மீள உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டதாக அவரது சகோதரன் கா. சற்குணம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் கடையொன்றில் வேலை செய்த சம்பளத்தை கேட்ட போது கடை முதலாளி தாக்கி வாய்க்காலில் தூக்கி எறிந்ததாகவும், இதன் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸாருக்கு வாய்மூல முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இறக்கக் காரணம் அடித்ததாக இருக்கலாம் எனவும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

cover_issue_62_en_US

SHARE