சிரியாவில் இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே கட்டித் தழுவி கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சு உருக வைத்தது.
சிரியாவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 17 ஆம் திகதி ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற 5 வயது சிறுவன் ஆம்புலன்ஸில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான்.
முகம் முழுவதும் ரத்தம் வழிய இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது போல தற்போது உள்ள வீடியோவில் ஆம்புலன்ஸ்சின் உள்ளே சிறுவன் ஒருவன் தூசி நிறைந்த முகத்தோடும், வாயில் ரத்தக்கரையுடன் இருப்பதும், மற்றொரு சிறுவன் அவரை ஓடி வந்து கட்டி அணைத்து அழுவதும், அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த அவர்கள் மேலும் அடித்து கதறி அழுவதும் காண்போரை கண்கலங்க வைத்தது.