தீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்!

400

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily (39) என்ற பெண்மணியின் தந்தை, கணவன் மற்றும் அவரது 3 சகோதரர்கள், ஐஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட இப்பெண், தனது குடும்பத்தை சீர்குலைத்த எதிரிகளை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பத்தில் சிறுபடை ஒன்றை அமைத்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வந்துள்ளார்.

மேலும், சிரிய அரசுப்படையில் இணைந்தும் போராடியுள்ளார். இதுவரை 19 தீவிரவாதிகளை கொலை செய்துள்ள இவர், அவர்களின் தலையை வெட்டி சமைப்பேன் என்றும் அவர்களின் உடலை எரிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இவர் மீது இதுவரை 6 கொலை முயற்சிகள் நடைபெற்றுள்ளன, மேலும் ஐஎஸ் தலைவர் அபுபக்தாதியிடம் இருந்தும் இவருக்கு மிரட்டல் வந்துள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் அச்சம்கொள்ளாத இவர், தனது 2 மகள்களையும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.

SHARE