தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்-

276

 

 

புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி தாம் பேசிய போது, அதனை சிலர் எள்ளி நகையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெலிஜ்ஜிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE