தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…

239

 

தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.
unnamed-24 unnamed-25 unnamed-26
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சூரிய கட்டைக்காடு நானாட்டான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் கடந்த ஒருவருட காலமாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உதவியோடு தையல் பயிற்சி நடாத்தப்பட்டுவரும்  வேளையில் அக்கட்டிடத்திற்கான மின்னிணைப்பு இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையிலே குறித்த கட்டிடத்துக்கான மின்னிணைப்பை வழங்குவதற்கான நிதியுதவியையும், அதே வேளை செட்டியார் கட்டையாடம்பன் புனித சவேரியார் பாலர் பாடசாலையானது கடந்த பத்து வருடங்கள் இயங்கிவரும் நிலையிலும் அங்கு கல்விபயிலும் சிறார்கள் மின்னிணைப்பு இல்லாமல் பலதரப்பட்ட அசௌகரியங்களை சந்தித்து வந்தமையையும் கருத்திற்கொண்டு குறித்த பாலர் பாடசாலைக்கும் புதிய மின்னிணைப்பை வழங்கும் நோக்கோடும்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான  நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து குறித்த நிதிகள் ஒதுக்கப்பட்டு 14-09-2016 புதன் காலை அமைச்சரது மன்னார் உப அலுவலகத்தில் அதற்கான  காசோலைகளை குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோக பூர்வமாக அமைச்சர் வழங்கிவைத்தார்.
SHARE