நடிகையான மகளை வீட்டை விட்டு வெளியேற்ற போலிஸில் புகார் அளித்த பிரபல நடிகர்!

85

தமிழ் சினிமாவில் பல படங்களில் பல கதா பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய குமார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நடிகை மஞ்சுளாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயகுமாருக்கு நடிகை ப்ரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் தற்போது வனிதா மீது அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை வனிதாவுக்கு வாடகைக்கு விட்டதாகவும், ஆனால் தற்போது அவரது வீடு என்று கூறி வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 4 படங்களில் மட்டுமே நடித்தவர் பின் சினிமாவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE