நல்லாட்சி அரசாங்கம் அல்ல! இது நாய் ஆட்சி என்கிறார் பிரசன்ன ரணதுங்க!

227

 

நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. இது நாய் ஆட்சி அரசாங்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களே தற்போது அரசாங்கம் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தமக்கு எதிரானவர்களை அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் அடக்கி வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இருந்து நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

SHARE