நாட்டை விட்டு தப்பிச்சென்ற சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி!

178

DSC01749

அரசியல் நெருக்கடி காரணமாக பொலிஸ் சேவையை விட்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று ஆட்சி மாற்றத்தின் பின் நாடு திரும்பியுள்ள முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் பதவியில் இணைத்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியசாந்த என்ற பொலிஸ் அதிகாரியே மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளார். இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் இலங்கை வந்த பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகவும், கடந்த பொதுத் தேர்தலின் போது இவர் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டை விட்டு சென்ற பல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மீண்டும் பதவி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் ஜகத் விஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுக்காதவர்கள் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதன் பொருட்டு குறித்த பெயர் பட்டியல் பொலிஸ் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியலில் பல ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE