நாவிதன்வெளி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் திறப்பு விழா

90
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான பிரதான மக்கள் பணிமனை மத்தியமுகாம் பிரதான வீதியின்  12ஆம் கொளனியில் நேற்று  16 திறந்து வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் மாகாண சபைகள் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் வீ.ஜெயசந்திரன்,  ஸ்ரீங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் கீர்த்தி விஜயசிங்க, சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எஸ்.நபீர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாவின்வெளி பிரதேசத்தின் தேர்தல் குழுத் தலைவராக செயற்பட்ட  ஏ.எம்.மஹ்ருப்,  கட்சியின் முக்கியஸ்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் பணிமனை ஊடாக பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்களிடையே சந்திப்புக்களை ஏற்படுத்தி பொது மக்களால் தெரிவிக்கப்படும் தமது பிரச்சினைகளுக்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
SHARE