நிரந்தர நியமனம் கோரி பத்தாவது நாளாக சுகாதார தொண்டர்கள் வவுனியாவில் போராட்டம்

161
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் பத்தாவது  நாளாக இன்றும் தொடர்கின்றது.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்,​​​​​​ அவர்களிடம் நேரில் சென்று அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து மாகாண சபையிடம் தான் தங்களுக்கு நிரந்திர நியமனம் பெறுவதட்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும். நியதி சட்டங்களில் மாற்றம் செய்து தங்களை நிரந்தர நியமனம் பெறுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் தங்கள் கோரிக்கையை முன் வைப்பதாகவும் கூறியிருந்தார்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.
கஷ்டப் பிரதேசங்களிலும்,  இக்கட்டான  சூழ்நிலைகளிலும் சேவையாற்றிய தமது நியமனம் குறித்து இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கும் சுகாதார தொண்டர்கள், இம்முறை தமக்கு உறுதியான தீர்மானம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.
SHARE