நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர்
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ளபரியாரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததேர்வு மையத்திற்கு 19–வயது மாணவி ஒருவர்நீட் தேர்வு எழுத வந்தார். அப்போது அங்கிருந்ததேர்வு மைய கண்காணிப்பாளர் மெட்டல்டிடெக்டர் மூலம் அந்த மாணவியை சோதனைசெய்தார். மெட்டல் டிடெக்டரை, மாணவியின்மேல் உள்ளாடைக்கு அருகே கொண்டு சென்றபோது அதில் ‘பீப்’ சத்தம் கேட்டது. இதனால்தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின்உள்ளாடையை அகற்றும்படி கூறினார்.
அதற்கு மாணவி, உள்ளாடையில் இரும்புகொக்கி இருப்பதால்தான் சத்தம் கேட்பதாகவிளக்கம் அளித்து உள்ளார். ஆனால், அதனைஏற்க மறுத்த கண்காணிப்பாளர் உள்ளாடையை அகற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்கமுடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனையடுத்து அந்த மாணவி வேறுவழியின்றிதனது உள்ளாடையை கழற்றி அவரதுதாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதசென்றார்.