நீண்ட நேரம் செக்ஸ் அனுபவிக்க மாத்திரை காமக்கொடூரன் பூபதி பற்றி பரபரப்பு தகவல்

1241
images (1)

சேலம் : பெண்களை வலையில் வீழ்த்திய காமகொடூரன் பயன்படுத்திய, லேப்-டாப், மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் பதிவாகியிருந்த ஆபாச வீடியோ காட்சிகளை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம், கே.ஆர்.தொப்பூர், கோனகாபாடியைச் சேர்ந்தவர் தேவி, 27. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவரை, தாரமங்கலம், கருக்கல்வாடியைச் சேர்ந்த பூபதி, தன் வலையில் வீழ்த்தி கற்பழித்தார். புகாரை அடுத்து, தாரமங்கலம் போலீசார், பூபதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பூபதி பயன்படுத்திய லேப்-டாப், மொபைல் போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், பல பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மொபைல் போனில், தொடர்பில் இருந்த பெண்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. பூபதியின் பின்னணியில் விபசார கும்பல், வெளிநாடுகளுக்கு ஆபாச வீடியோ விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா, என்று விசாரித்து வருகின்றனர். தேவி கூறியதாவது:
பேச்சு திறமையால், பெண்களை எளிதில் வலையில் சிக்க வைத்து, பூபதி அவர்களுடன் உல்லாசமாக இருப்பான். குடும்ப பெண்களை ஏமாற்றி, அவர்களுக்கு தெரியாமல் வீடியோ படம் எடுத்து, பணம் பிடுங்கி வருகிறான். மான்சா கார், லேப்-டாப், விலை உயர்ந்த மொபைல் போன் போன்றவற்றை வைத்து இருக்கிறான். இவனுக்கு எப்படி வருமானம் வருகிறது, அவனது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தால், உண்மைகளை கண்டுபிடிக்க முடியும்.
பெண்களை காரில் அழைத்து சென்று, காரிலேயே, “செக்ஸ்’ வைத்து கொள்வான். கன்னங்குறிச்சி சாலையில், காரில் பெண்ணுடன் இருந்த போது, போலீசார் கையும் களவுமாக பிடித்து, எச்சரிக்கை செய்து அனுப்பிய சம்பவமும் நடந்துள்ளது. பெண்களை ஏமாற்றி, பணம், தங்க நகைகளை பிடுங்கி கொள்வான். மலட்டுதன்மை நீக்கும் மாத்திரை விற்பனை செய்யும் பிரதிநிதி போல, குடும்ப பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து, பலவீனத்தை அறிந்து, காமவலையில் வீழ்த்துவது கைவந்த கலை. நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க, மருந்து மாத்திரை சாப்பிடுவான்.

SHARE