நேற்று கைதான தமிழக மீனவர்கள் இன்று விடுவிப்பு

209
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 11 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பீ.எவ்.மிரென்டா லங்காசிறி  சேவைக்கு  தெரிவித்தார்.

இந்த மீனவர்களின் படகுகளிலுள்ள ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவர்கள் திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படையின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக அது உறுதி செய்யப்பட்டதன் பின்னர், குறித்த தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடற்படையினரினால் தமிழக மீனவர்கள் அழைத்து செல்லப்பட்டு, இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பீ.எவ்.மிரென்டா தெரிவித்தார்.

SHARE