பஞ்சாப் அணியில் 187 ஓட்டங்கள் விளாசி அபாரம்: சச்சின் சொன்னதை செய்து காட்டிய யுவராஜ் சிங்

285
ரஞ்சி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணியில் இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் முதல் இன்னிங்சில் 187 ஓட்டங்கள் விளாசி அசத்தியுள்ளார்.ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின.

இதில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணியின் யுவராஜ் 187 ஓட்டங்கள் (14 பவுண்டரி, 7 சிக்சர்) அடித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் எனது ஆட்டத்தை விரும்பி ஆடுகிறேன். இது போன்ற ஆட்டம் நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

மேலும், “நான் கடந்த வருடம் சச்சினிடம் பேசினேன். அப்போது அவர் இந்திய அணிக்கு விளையாடுவது என்பது முக்கியமான ஒன்று தான்.

அதே போல் நமது ஆட்டத்தை விரும்பி விளையாடுவது அதை விட முக்கியமானது. அது நல்ல பலன் கொடுக்கும் என்றார். அதை தான் நான் செய்தேன்” என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

SHARE