வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதி ஒதுக்கீட்டின் கீழ் கௌரவ வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் சார்பில் புனரமைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறை கட்டடம் கௌரவ அமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்தின் வகுப்பறையே இவ்வாறு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வகுப்பறையினை வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்த அமைச்சர் அவர்கள் மாணவர்களால் நடத்தப்பட்ட மாணவர் சந்தையினையும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.