பாகுபலி படப்பிடிப்பின் போது நடிகர் பிரபாஸ் 15 வகை பிரியாணி சாப்பிட்டாரா..? அதிர்ச்சியில் இயக்குனர்!

186

சர்வதேச அளவில் வசூல் வேட்டையாடி வரும் ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் நாயகன் படப்பிடிப்பின் போது, 15 வகையான பிரியாணியை சாப்பிட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி, தனது கதாநாயகர்களின் உணவு கட்டுப்பாடு, உடல் அமைப்பு, உடற் பயிற்சி உள்ளிட்டவை குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பாகுபலி திரைப்படத்தில் நடிக்கும் காரணத்தால் பிரபாஸ் தனது உணவில் மிகுந்த கட்டுப்பாடு வைத்திருந்ததாகவும், உடற்பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், கதாப்பாத்திரங்களின் முக்கியத்துவம் உணர்ந்து நடிகர்கள் அவர்களின் சொந்த ஆர்வத்திலேயே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். கதாநாயகர்களின் இத்தகைய அர்ப்பணிப்பிற்காக மாதம் ஒரு முறை ‘சீட் மீல் டே’ கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிடலாம் என ராஜமௌலி கூறினார்.

இந்நிலையில், ‘சீட் மீல் டே’ வந்துவிட்டால் படப்பிடிப்பில் மிகவும் குஷியாக இருப்பது நடிகர் பிரபாஸ் தான் என்ற ராஜமௌலி, பிரபாஸ் 15 வகையான பிரியாணிகளை சாப்பிட்டது தனக்கு வியப்பாக இருந்ததாக கூறினார். வழக்கமாக உண்ணும் மீன், மட்டன், கோழி வகையைச் சாராமல் அசைவம், சைவம் என சுமார் 15 வகையான பிரியாணியை சாப்பிட்டார். இதற்கு சைட் டிஷ் எதுவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை என கூறினார்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்த பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் திரைப்படத்தில் 2 தலைமுறை கதாப்பாத்திரங்களில் நடிப்பதால் உடல் கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தியது பாராட்டத்தக்கது என்றும் அவர் தனது நாயகர்களை புகழ்ந்தார். இந்த உண்மையை சமீபத்தில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ‘பாகுபலி’ திரைப்படம் திரையிடப்பட்டபோது ராஜமௌலி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மீண்டும் பிரபாஸுடன் இயக்குனர் ராஜமௌலி கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன. தற்போது, பிரபாஸ் ஆக்ஷன் திரில்லர் படமான ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்.

 

SHARE