புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம் பார்வையிட படையெடுக்கும் மக்கள்..!

102

புத்தளத்தில் அதிசய காளான் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம், கோட்டகச்சி, கொடகிவுல பிரதேசத்தில் உள்ள நிஹால் பிரேமசிறி என்பவரின் தோட்டத்திலேயே இந்த காளான் வளர்ந்துள்ளது.

இந்த காளான் ஒன்றரை அடி அகலத்தை கொண்டுள்ள நிலையில், 3 அங்குலத்தில் தடிமனை கொண்டு வளந்திருக்கிறது.

நிலத்திலிருந்து ஒன்றரை அடி உயரம் வரை இந்தக் காளான் வளர்ந்துள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலையில், இவ்வாறாக காளான் ஒன்று வளர்வதென்பது ஒரு அதிசயமாக கருதப்படுகின்றது. வியப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ள காளானை பார்வையிட பெருந்திரளான மக்கள் பிரேமசிறியின் தோட்டத்திற்கு வந்து செல்கின்றர்.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட காளான்களில் இது மிகவும் பெரியது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE