புலிகளுடன் தொடர்பா? நாடு கடத்தப்படுவர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றுக்கு ஆலோசனை

174

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி அந்தஸ்த்துக்கான விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியிருந்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் நிமித்தம், இந்த ஆலோசனை கோரப்பட்டிருந்தது.

இதன்படி இலங்கையில் துன்புறுத்தல்கள், மருத்துவ நிராகரிப்புகள், உயிராபத்து என்பன தொடர்வதாக கூறப்பட்டாலும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களது அகதி அந்தஸ்த்து கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று குறித்த சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே  ஈழ அகதிளுக்கான தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE