கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கதக் மாவட்த்தை சேர்ந்த ஈரன்ன தல்வர், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் 3 வயது சிறுவன் தேவராஜ் ஆகியோர் முனிராபாத்தில் உள்ள ஹுளிகம்மா கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனிராபத் ரெயில் நிலையத்தில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் சிறுவன் எழுந்தும் அவர்கள் கண்விழிக்கவில்லை.
பெற்றோர்கள் தூங்குவதாக நினைத்து சிறுவன் அங்குள்ள பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் வெகு நேரம் ஆகியும் பெற்றோர்கள் கண் விழிக்காததை கண்டு சிறுவன் அழத்தொடங்கியுள்ளான்.
அங்கிருந்த பயணிகள் சிறுவனை கவனித்த போது தான், பெற்றோர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றியதுடன் சிறுவனை மீட்டுள்ளனர். மேலும் சிறுவனை அவரது உறவினர்களிடம் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.