பேட்டை பறக்க விட்ட டோனி.. தலைவராக புதிய மைல்கல்லை எட்டினார் (வீடியோ இணைப்பு)

320
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது.

இதில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் டோனி 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் தலைவராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்கை (6295 ஓட்டங்கள், 218 போட்டி) முந்தி 2வது இடம் பிடித்தார்.

டோனி, இதுவரை 184 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு 6313 ஓட்டங்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் பொண்டிங் (8497 ஓட்டங்கள், 230 போட்டி) உள்ளார்.

SHARE