போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ருவான் விஜேவர்தன

223

போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என்பதனை பிராந்திய வலய நாடுகள் உறுதி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் ஏனைய பல குற்றவியல் செயற்பாடுகள் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க புது வழிகளை கண்டு பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டின் பின்னர் கடல் வழியான போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் 200 முதல் 400 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE