போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்

280

 

சிரியா விமான படைகளுக்கு சொந்தமான போர் விமானத்தை ISIS தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த சிரியாவின் போர் விமானத்தையே ஏவுகணை உதவியுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஜீபில் டார்டா என்னும் ஏரியா அருகில் விமானி விமானத்தை தரையில் இறக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள விமானநிலையமும், சில முக்கிய மாவட்டங்களும் கடந்தாண்டு முதலே ISIS கட்டுபாட்டுக்களால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE