மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் 35 பேருக்கு நேர்ந்த கதி!

117

 

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில், 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது உடனடியாக ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SHARE