மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள 1500 வீடுகள்.

173

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஐந்தாண்டு கால அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட பத்துத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஆயிரத்து 500 வீடுகளும் எட்டு பாலங்களும் நிரமாணிக்கப்படவுள்ளன. கிராமிய வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களால் ஆறு இலட்சம் பேர் பயன்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE