மட்டக்களப்பில் விக்டர் அணைக்கட்டினை பார்வையிட்ட விவசாய அமைச்சர்

455
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கண்டம் ஈச்சையடி பிரதேசத்திலுள்ள விக்டர் அணைக்கட்டினைப் பார்வையிடுவதற்காகப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன் போது விக்டர் அணைக்கட்டினைப் பார்வையிட்டதுடன், பிரதேச பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

பல காலமாக இந்த அணைக்கட்டானது தடுப்புகள் எதுவும் இன்றி கிராம மக்களினால் பலகைகள் மூலமே தடுப்புகள் போடப்பட்டு தங்களின் விவசாய தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் அது அவர்களுக்கு பாரிய சவாலாக இருந்ததுடன் பல அசௌகரியங்களையும் ஏற்படுத்தியிருந்தது. நீரோட்டம் அதிகரிக்கும் காலப்பகுதிகளில் அப்பலகைகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதால் மக்கள் இதன் மூலம் நிறைந்த பலனைப் பெறமுடியாமல் இருந்தது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டே அமைச்சர் அவ் அணைக்கட்டினைப் பார்வையிடுவதற்கு களவிஜயம் மேற்கொண்டு இதனை நிவர்த்தி செய்வதற்குரிய பூரண செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரினால் கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

SHARE