மனந்திருந்தி வாழும் தீவிரவாதியின் கதை! சுவாரசிய சம்பவம்

341
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் பிரித்தானியாவில் கடை திறந்து வியாபாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் குடியிருந்து வருபவர் அப்ரார் மிர்ஸா என்பவர், மத அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து இவர் செயல்பட்டும் வந்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முகது நபி குறித்து புத்தகம் வெளியிட்டவரின் வீட்டை நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்துள்ள அப்ரார், தற்போது தனது நிலையை உணர்ந்து மனந்திருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் பிரித்தானியர் எனவும் பிரித்தானியா தமது வீடு எனவும் கூறும் அவர், இனிமேல் மத அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து தமது வாழ்க்கையை தொலைக்க விரும்பவில்லை என்றார்.

தமது அறியாமை காரணமாக அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளதாக கூறும் அவர், இனிமேல் அப்பேர்பட்ட பாதையில் செல்ல தாம் விரும்பவில்லை என்றார்.

தற்போது பிரித்தானியாவின் முக்கிய பகுதியில் London Beared Company எனும் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE