மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோருக்கு அழைப்பானை

272
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த வருடம் HNDA மாணவர்கள் மீது பொலிஸாரினால் நடாத்தப்பட்ட தாக்குதல்  தொடர்பாக தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அங்கு கடமையாற்றும் அதிகாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நீதிமன்றிட்கு சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE