மலேசியாவைச் சேர்ந்த லியு தோலின் ”காந்த மனிதன்” என்று அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம், உலோகப்பொருட்களை தன் உடலில் ஒட்ட வைக்கும் திறன் பெற்றிருப்பதால், இவருக்கு இப்பெயர் உருவானது.
2 கிலோ எடையுள்ள உலோகங்களை தனித்தனியாக பிரித்து, கிட்டத்தட்ட 36 கிலோ வரை, எவ்விதமான பசையும் பயன்படுத்தாமல், தன் உடலில் ஒட்ட வைத்துள்ள இவர், டிஸ்கவரி சேனலில் வரும் ஒன் ஸ்டெப் பியான்ட் என்ற நிகழ்ச்சியிலும், தனது முழு திறனையும் வெளிப்படுத்தி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் உடலை ஆராய்ந்த விஞ்ஜானிகள், ”இவருடைய தோலில் உள்ள அதிகப்படியான உராய்வினால் ஏற்படும் உறிஞ்சும் தன்மையால் இவ்வாறு, இவரால் உலோகங்களை ஒட்ட வைக்க முடிகிறது” என்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
– See more at: http://www.manithan.com/news/20160308119106#sthash.nzQ3IvZK.dpuf