மழை காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டி நிறுத்தம்

101
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

நியூஸிலாந்தின், கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இன்று காலை முதல் மழை குறுக்கிட்டதால் போட்டியை ஆரம்பிப்பதற்கு தடை ஏற்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதாக போட்டியை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE