மாநிலம், சமஷ்டிக்கு இலங்கையில் இடமில்லை! விக்கியின் கூற்றுக்கு வாசு கருத்து !!

180

 

மாநிலம் மற்றும் சமஷ்டி என்ற சொற்களுக்கு இலங்கையில் இடம் இல்லை. ஒற்றையாட்சிஅடிப்படையிலான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசுவதையே பொது எதிரணி ஆதரிக்கும். இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பொது எதிரணியின் நாடாளுமன்றஉறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு எதிராகவே பொதுஎதிரணி செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் வடக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வுத்திட்ட வரைபு தொடர்பில் பொது எதிரணியினர் சிங்கள் மக்கள் மத்தியில்தவறான விடயங்களை எடுத்துக்கூறி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவிடம்வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் மாத்திரமே பெரும்பான்மையாகவாழுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவினமக்களும் வாழ்கின்றனர். அதேபோல், கொழும்பு மற்றும் மலையகத்திலும் தமிழ் மக்கள்சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

எனவே, விக்னேஸ்வரன் கூறுவதுபோல் எவ்வாறுஇலங்கையை இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க முடியும்?

சமஷ்டி மற்றும் மாநிலம் என்பவை இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்குப் பொருந்தும்.

அவ்வாறு இலங்கையிலும் செய்யத் தூண்டுவதை அடியோடு நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைபை நாங்கள் ஒருபோதும்ஏற்றுக்கொள்ளமாட்டோம். அதற்கு எதிராகவே நாங்கள் செயற்படுவோம்.

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும். ஒற்றையாட்சி அடிப்படையில் நியாயமான தீர்வை வழங்கஎதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம்.

அதனைப் புரிந்துகொண்டு பிரிவினைவாதத்தைதூண்டாமல் ஒற்றையாட்சி அடிப்படையில் தீர்வைப் பெற வடக்கு மாகாண சபைமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்க வேண்டும்; செயற்படவேண்டும் என்றார்.

SHARE