மாலியில் தீவிரவாத தாக்குதல் : 14 பேர் பலி

431

மாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பலர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி அமைப்பு ஆகியவற்றின் மீது தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அப்பகுதியில் எதிர்ப்பட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும், அங்கிருந்த ஒரு லொறி மற்றும் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. .

தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE