இந்திய முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்த இலங்கையர்கள் இந்த மாதம் 23ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 23ஆம் திகதி 53 பேர் நாடு திரும்பவுள்ளனர்.
இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் பல வருடங்களாக இருந்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
மேலும், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.