முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி!

266
முழுமையாக முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய காவ்துறையினர் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ம் திகதி வரை இத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதனையடுத்து இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய ஒழுக்கு விதிகளின் படி, பாதுகாப்பான தலைக்கவசங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதன்படி விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை நவம்பர் 2ம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

SHARE