முன்மொழியப்பட்ட 03 உள்ளுராட்சி சபைகள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை அறிக்கை பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு..

157

 

முன்மொழியப்பட்ட 03 உள்ளுராட்சி சபைகள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை அறிக்கை பதில் அரச அதிபரிடம் சமர்ப்பிப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டில் குறிப்படப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முன்மொழிவுகள் மீதான கருத்துரை அறிக்கை இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் அண்மையில் பதில் அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையின் அடிப்படையில் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோறளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பெயரில் புதிய பிரதேச சபை ஒன்றை நிறுவுதல், கோறளைப்பற்றுத் தெற்கு (கிரான்) என்ற பெயரில் பிரதேச சபையொன்றை நிறுவுதல், காத்தான்குடி நகரசபையைப் பிரித்து மாநகரசபை மற்றும் பிரதேச சபை ஒன்றை நிறுவுதல் போன்ற 03 முன்மொழிவுகள் தொடர்பிலான கருத்துரைகள் வழங்குவதற்கு இன்றைய தினமே இறுதித்தினமாகும்.

அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண அமைச்சர், மாகாணசபைப் பிரதித் தவிசாளர், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்ட கருத்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் பதில் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE