முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

303

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். fghjkuwcr   இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த நபர் தலைமறைவாகி விட்டார் என்றும் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. –

SHARE