மொரகஹஹேன பிரதேசத்தில் துப்பாக்கிப்பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

14

 

மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

SHARE