கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.கொழும்புத்துறையில் இருந்து பாசையூர் வழியாக பஸ் சென்றுகொண்டிருந்த போது, பாசையூர் பகுதியில் மூன்று பேர் பஸ்ஸை நிறுத்தியுள்ளனர்.
பஸ் அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்று பஸ்ஸை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் இரு முதியவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது, குறித்த மூவரும் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி மீது கல் வீசியுள்ளனர்.
பஸ்ஸின் கண்ணாடி உடைந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த இருவர் மீதும் கல் தாக்கி காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணித்தியாலயம் பஸ் சாரதிகள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.