யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இரு சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலை

199

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இரு சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

வித்தியா கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம்,  ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேகநபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் இருவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

 

சிவ­லோ­க­நாதன் வித்­தியா 18 வய­தான பாட­சாலை மாணவி. யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு 9ஆம் வட்­டாரம் வல்லன் பகு­தியைச் சேர்ந்­தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்­பத்தின் கடைக்­குட்டி. அக்கா வவு­னியா கல்­வி­யியல் கல்­லூ­ரியில் பயின்று வரும் நிலையில் அண்ணன் மின் இலத்­தி­ர­னியல் கார் திருத்­து­ன­ராக கட­மை­யாற்­று­பவர்.

புங்­கு­டு­தீவு மகா வித்­தி­யா­ல­யத்தில் உயர்­த­ரத்தில் கல்வி பயின்று வந்த வித்­தியா கெட்­டிக்­காரி. கல்வி நட­வ­டிக்­கை­களில் மட்­டு­மல்­லாது புறக்கிருத்திய செயற்­பா­டு­க­ளிலும் அவ­ளது திற­மையை வியக்­கா­த­வர்கள் அப்­பி­ர­தே­சத்தில் இருக்க முடி­யாது எனலாம். இந்­நி­லையில் வித்­தி­யாவின் தாய் தனது மகளை யாழ்ப்­பா­ணத்தில் உயர் நிலை பாட­சா­லை­யொன்றில் சேர்ப்­ப­தற்­கான ஆயத்­தங்­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருந்தார். இது தொடர்பில் விண்­ணப்­பங்கள் கூட பூர்த்தி செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் ஒரு கெட்­டிக்­காரி என்ற நிலையில் வித்­தி­யாவின் பாட­சாலை அவளை இழக்க விரும்­பா­ததால் அம்­மாவின் அந்த கனவு நிறை­வே­ற­வில்லை.

vithஆம். அன்று 13ஆம் திகதி புதன்­கி­ழமை வழமை போன்றே வித்­தியா பாட­சா­லைக்கு செல்­கிறாள். பல சம­யங்­களில் வித்­தி­யாவை அவள் அண்ணன் சிவ­லோ­க­நாதன் நிஷாந்தன் பாட­சா­லைக்குக் கூட்டிச் செல்­வது வழமை. எனினும் அன்று காலை நிஷாந்­த­னுக்கு அவ­சர வேலை­யொன்று இருந்ததால் அவரால் தனது தங்­கையை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல முடி­ய­வில்லை.

அப்­போது நேரம் காலை 7.00மணியை கடந்­தி­ருந்­தது வித்­தியா தான் வழ­மை­யாக பாட­சாலை செல்லும் வழியே தனியே பாட­சா­லையை நோக்கி நடக்­க­லானாள்.

பாட­சாலை நேரம் முடி­வ­டைந்­தது. வித்­தியா வீடு திரும்­ப­வில்லை. நேரம் செல்லச் செல்ல வித்­தியா வீடு திரும்­புவாள் என எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த அவள் குடும்­பத்­தாரின் மனதில் அச்சம் குடி­கொள்ளத் தொடங்­கி­யது.

அந்த அச்சம் அவர்களை பாட­சாலை தரப்பை வினவச் செய்­தது. வித்­தியா இன்று பாட­சா­லைக்கு வரவே இல்லை என்ற பாட­சாலை தரப்பு பதிலால் அவள் குடும்பம் மேலும் அச்­ச­ம­டைந்­தது.

வித்­தி­யாவின் நண்­பிகள் தெரிந்­த­வர்கள் என அனை­வ­ரி­டமும் குடும்­பத்தார் விசா­ரித்தும் சாத­க­மான எந்­த­வொரு தக­வலும் அவர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. சூரியன் மறைந்து தீவகம் எங்கும் காரிருள் கவ்விக் கொண்ட போதும் வித்­தியா வீடு திரும்­ப­வில்லை.

நேரம் இரவு 9.00 மணியைக் கடந்­தி­ருந்­தது. வித்­தி­யாவின் அம்மா தனது மகளை தேட பொலி­ஸாரின் உத­வியை நாடினார். ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலையம் சென்ற வித்­தி­யாவின் தாய் பாட­சாலை சென்ற தனது மகளைக் காண­வில்­லை­யென முறைப்­பாடு ஒன்­றினை பதிவு செய்­துள்ளார். இந்­நி­லையில் அன்­றைய நாள் முழுதும் வித்­தி­யாவின் வரு­கையை எதிர்­பார்த்து ஏமாற்­ற­ம­டைந்த அந்த குடும்பம் மறுநாள் வியாழன் விடிந்­ததும் வித்­தி­யாவை தேடும் பணி­யினை ஆரம்­பிக்­கின்­றது.

வித்­தி­யாவின் அம்மா அண்ணன் நிஷாந்தன் மேலும் இரு­வரும் இணைந்து இந்த தேடு­தலை ஆரம்­பிக்­கின்­றனர். வித்­தியா வழ­மை­யாக பாட­சா­லைக்குச் செல்லும் பாதை வழியே அந்தத் தேடல் தொடர்­கி­றது. இதன் போதுதான் புங்­கு­டு­தீவு 8ஆம் வட்­டாரம் பகு­தியில் அந்தக் குடும்­பத்­தினர் வித்­தி­யாவின் பாத­ணியை ஒத்த ஒரு பாத­ணியை பாதை ஓரத்தில் காண்­கின்­றனர்.

இத­னை­ய­டுத்து வித்­தி­யாவின் அண்ணன் இந்த பாதணி இருந்த திசை­யாக காட்­டுக்குள் சென்­றுள்ளார். சுமார் 15 மீற்­றர்கள் செல்லும் போது புதர் நிறைந்த அந்த காட்டில் நிஷாந்தன் கண்ட காட்சி அவனை அதிர்ச்­சியில் உறையச் செய்­தது.

ஆம். வித்­தியா சட­ல­மாக இருந்தாள். பாட­சாலை சீருடை களை­யப்­பட்டு கால்கள் இரண்டும் அரளி மரங்­களில் வெவ்­வே­றாக கட்­டப்­பட்டு கைகளும் அவ­ளது கழுத்­துப்­பட்­டி­யி­னா­லேயே கட்­டப்­பட்டு வாயில் ஏதோ திணிக்­கப்­பட்­டி­ருக்க சட­லத்தின் மேல் பனை ஓலை ஒன்றும் போடப்­பட்­டி­ருந்­தது.

தனது தங்கை சட­ல­மாக கிடப்­பதைக் கண்ட நிஷாந்தன் சப்­த­மிட்டு அழு­த­வாறே அதிர்ச்­சியில் உறைந்து போக ஊரார் இந்த சப்­தத்தில் அவ்­வி­டத்தில் ஒன்று கூடினர். அடுத்த கணமே 119 பொலிஸ் அவ­சர இலக்­கத்­துக்கு பறந்த அழைப்­பொன்று சேர் புங்­கு­டு­தீவு பகு­தியில் காணாமல் போன மாணவி சட­ல­மாக உள்ளார் என தகவல் கொடுத்­தது. அந்த தகவல் ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ருக்கு பரி­மாற்­றப்­ப­டவே அப்­பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி தலை­மையில் அங்கு குழு­வொன்று விரைந்­தது. அந்தக் குழு அவ்­வி­டத்தை அடையும் போதும் குறி­கட்­டுவான் உப காவல் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் பீ.என். இரான் தலை­மை­யி­லான பொலிஸ் குழு அவ்­விடம் சென்­றி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து வித்­தி­யாவின் சட­லத்தை மீட்ட பொலிஸார் நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களின் பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் பரி­சோ­த­னை­க்­கா­கவும் பிரேத பரி­சோ­த­னை­க்­கா­கவும் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.

அதன் பின்னர் வட மாகா­ணத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க யாழ். மாவட்­டத்­திற்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜி.கே. பெரேரா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் எல். விஜ­ய­சே­கர ஆகி­யோரின் மேற்­பார்வை ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்­திற்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சேனா­ரத்­னவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் க்யூ. ஆர். பெரேரா தலை­மையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

மேற்­படி உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் இவ்­வி­டயம் குறித்து உட­ன­டி­யாக ஆலோ­சித்து சிறப்பு பொலிஸ் குழு­வொன்றை விசா­ர­ணை­க­ளுக்­காக அமைப்­பது எனவும் தீர்­மா­னித்­தனர். அதன்­படி குறி­கட்­டுவான் உப காவல் நிலைய பொறுப்­ப­தி­காரி உப­பொலிஸ் பரி­சோ­தகர் பி. என். இரான் தலை­மையில் சார்­ஜன்­க­ளான அம­ர­சிங்க, அபே­சிறி, நட­ராஜா கான்ஸ்­ட­பிள்­க­ளான போதி கிருஷ்ணன், புஷ்­ப­கு­மார கிரி­ஷாந்த உள்­ளிட்ட பெரிய குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது.

இந்த சிறப்பு விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு மேல­தி­க­மாக யாழ். பல் குற்ற விசா­ரணை பிரிவு, யாழ். குற்­றத்­த­டுப்புப் பிரிவு, யாழ். புலன் விசா­ரணைப் பிரிவு ஆகி­ய­வற்றின் பொலிஸ் குழுக்­களும் விசா­ரணை உத­வி­க­ளுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லை­யில்தான் வித்­தி­யாவின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கையும் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சிறப்பு அறிக்­கையும் சிறப்பு விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு கிடைத்­தது.

அந்த அறிக்­கை­களில் வித்­தியா கூட்டு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. கூட்டு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு வித்­தியா உட்­ப­டுத்­தப்­படும் போது அவ­ளது வாயில் சந்­தேக நபர்கள் கீழ் உள்­ளா­டையை திணித்­தி­ருந்­ததால் ஏற்­பட்ட மூச்­சுத்­தி­ணறல் வித்­தி­யாவின் மர­ணத்­திற்­கான காரணம் என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சிறப்பு அறிக்கை தெரி­விக்­கவே வித்­தி­யாவை பலாத்­காரம் செய்த சந்­தேக நபர்கள் அனை­வரும் அவ­ளது கொலை தொடர்­பிலும் சந்­தேக நபர்­க­ளா­யினர்.

இத­னை­ய­டுத்தே விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் போது கூட்டு பலாத்­காரம் செய்து கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் அம்­மா­விடம் சிறப்பு பொலிஸ் குழுவினர் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்­தனர்.

அந்த வாக்கு மூலத்தில் வித்­தி­யாவின் தாயார் கொடுத்த சில தக­வல்கள் விசா­ர­ணையின் திருப்பு முனை­யாக அமை­ந்தது. வித்­தி­யாவின் குடும்­பத்­தா­ருடன் எவ­ருக்­கேனும் பகை உள்­ளதா என்று பொலி­ஸாரின் கேள்­விக்கு வித்­தி­யாவின் தாயார் அளித்த பதிலே அந்த திருப்­பத்­திற்கு கார­ண­மா­னது.

அவ்­வாக்கு மூலத்தில் வழக்­கொன்றின் போது தான் சில நபர்­க­ளுக்­கெ­தி­ராக சாட்­சியம் அளித்­த­தா­கவும் அவர்­க­ளு­ட­னேயே தமக்கு பகை­யி­ருந்­த­தா­கவும் அவர்கள் தொடர்­பி­லேயே சந்­தேகம் உள்­ள­தா­கவும் தாயார் தனது வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த அனை­வரும் வித்­தி­யாவின் சடலம் மீட்­கப்­பட்ட போது ஒன்று கூடி­யி­ருந்­தனர். எனினும் தாயார் சந்­தேகம் வெளி­யிட்ட நபர்கள் அந்த பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்த போதிலும் அவர்­களை அங்கு காண முடி­ய­வில்லை. இந்­நி­லையில் அது தொடர்­பி­லான தக­வல்­களை சேக­ரித்த ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் முதலில் மூவரை கைது செய்­தனர்.

பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40), பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) ஆகிய மூவரே இவ்­வாறு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர். இம் மூவரில் இரு­வ­ருக்­கெ­தி­ரா­கவே வித்­தி­யாவின் தாயார் சாட்­சியம் அளித்­தி­ருந்தார். மருத்­துவர் ஒரு­வரின் வீட்டில் இடம்­பெற்ற திருட்டுச் சம்­பவம் தொடர்­பி­லான வழக்­கி­லேயே இவ்­வாறு அவர் சாட்­சியம் அளித்­தி­ருந்தார். அந்த வழக்கில் அவ்­வி­ரு­வரும் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு சிறைத்­தண்­ட­னையும் அனு­ப­வித்­தி­ருந்­தனர்.

இதன் பின்­ன­ணி­லேயே அம் மூவ­ரையும் கைது செய்­தி­ருந்த பொலிஸார் அவர்­களை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்தி 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.

இத­னை­ய­டுத்து உப பொலிஸ் பரி­சோ­தகர் இரான் தலை­மை­யி­லான சிறப்பு விசா­ர­ணைக்­குழு பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது. இதன் போது அந்த பொலிஸ் குழு­வுக்கு கிடைத்த தக­வல்கள் மற்றும் சாட்­சி­யங்கள் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் ஐவர் அடை­யாளம் காணப்­பட்­டனர். மகா­லிங்கம் சஷேந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம், குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன். ஆகிய ஐவரே இவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்­டனர். இதில் குஷாந்தன் வேலணை பிர­தேச சபையில் டிரெக்டர் சார­தி­யாக பணி­யாற்­று­பவர். சஷேந்­திரன், குக­நாதன், சந்­தி­ர­ஹாஷன் ஆகிய மூவரும் கொழும்பில் பணி­யாற்­று­ப­வர்கள். இதை விட இவர்கள் அனை­வரும் ஒரே நண்பர் குழாத்தை சேர்ந்­த­வர்கள்.

இந்­நி­லையில் இவ் ஐந்து நபர்­களும் வித்­தி­யாவின் சடலம் மீட்­கப்­படும் போதும் இறுதி கிரி­யை­களின் போதும் முன்­னின்று செயற்­பட்­ட­வர்­க­ளாவர். இப்­ப­டி­யி­ருக்­கையில் உப பொலிஸ் பரி­சோ­தகர் இரா­னுக்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரு தகவல் கிடைத்­தது. அதா­வது இந்த ஐந்து பேரும் புங்­கு­டு­தீவு நாகன்­கடை சந்­தியில் இணைந்து கொழும்பு நோக்கி செல்ல தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் அது தொடர்பில் வாக­னமும் தயார் நிலையில் உள்­ள­தா­கவும் அத் தகவல் குறிப்­பிட்­டது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக குறித்த இடத்­திற்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழு அந்த ஐவ­ரையும் கைது செய்­தனர். கைது செய்­யப்­படும் போது அவர்கள் அனை­வரும் மது போதையில் இருந்­த­துடன் கடற்­க­ரைக்குச் சென்று ஓய்­வாக இருந்­துள்­ள­மையும் கோயி­லுக்கு சென்­றுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­தது. இந்­நி­லையில் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸார் கொலையின் பின்­ன­ணியை கண்­ட­றிந்­துள்­ளனர். பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­க­ரவின் தக­வல்­களின் பிர­காரம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மூவரும் வேலணை பிர­தேச சபையில் பணி­யாற்றும் குஷாந்­த­னுக்கு வழங்­கிய ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்த ஒப்­பந்­த­மா­னது குஷாந்­த­னுக்கு வழங்­கப்­பட்­ட­துடன் அவன் தனது நண்­பர்­களை இது தொடர்பில் கொழும்பில் இருந்து அழைத்து இணைத்துக் கொண்டு இக் கொடூ­ரத்தை புரிந்­தமை தொடர்பில் பிர­தான சந்­தேக

(30 ஆம் பக்கம் பார்க்க)

நப­ரான குஷாந்தன்

ஒப்­புதல் வாக்கு மூலம் அளித்­துள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு சுட்­டிக்­காட்­டினார்.

இந்த 5 சந்­தேக நபர்­க­ளையும் சிறப்பு விசா­ர­ணைக்­குழு கைது செய்த பின்னர் அவர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் மேலும் பல அதிர்ச்சி தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் காதணி ஜோடி மூக்குக் கண்­ணா­டியும் பிர­தான சந்­தேக நப­ரான குஷாந்­தனின் வீட்­டி­லி­ருந்து விசா­ரணை குழு­வி­னரால் மீட்­கப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் தக­வல்கள் ஊடாக அறிய முடிந்­தது.

நேற்று காலை வரை உப­பொலிஸ் பரி­சோ­தகர் இரான் தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளின்­படி நடந்­ததை இப்­படி விப­ரிக்­கலாம்.

இந்­தி­ர­குமார், ஜெய­குமார், தவக்­குமார் ஆகிய மூவரும் 10000 ரூபாவை பின்னர் தரு­வ­தாக கூறி­யதன் அடிப்­ப­டையில் குஷாந்­த­னிடம் வித்­தி­யாவை கொலை செய்யும் திட்டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

வித்­தி­யாவை கொலை செய்யும் திட்­டத்­திற்கு கொழும்பில் உள்ள தனது கூட்­டா­ளி­களை குஷாந்தன் இதனை தொடர்ந்தே ஒன்று சேர்த்­துள்ளான். மாதம் ஒரு முறை­யேனும் குஷாந்தன் இல்­லத்­துக்கு வந்து செல்லும் கொழும்பில் பணி­யாற்றும் சசேந்­திரன் குக­நாதன் சந்­தி­ர­ஹாசன் ஆகி­யோ­ரையும் கண்ணன் எனப்­படும் கோகி­ல­னையும் இது தொடர்பில் குஷாந்தன் புங்­குடு தீவுக்கு அழைத்­துள்ளான்.

இத­னை­ய­டுத்து கடந்த 12 ஆம் திகதி செவ்­வா­யன்று இரவு 9.00 மணிக்கு கொழும்­பி­லி­ருந்து பஸ்­ஸே­றிய சசேந்­திரன் குக­நாதன் சந்­தி­ர­ஹாசன் ஆகியோர் புதன் அதி­காலை 5.00 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தை அடைந்­துள்­ளனர். அங்­கி­ருந்து முதல் பஸ்­ஸி­லேயே குறி­கட்­டு­வானை அடைந்­துள்ள அம்­மூ­வரும் ஆலடி சந்­தியில் இறங்கி நேராக குஷாந்­தனின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். அங்கு சென்ற அவர்கள் மது அருந்­தி­யுள்­ளனர். இதனைத் தொடர்ந்தே காலை 7.30 மணி­ய­ளவில் வித்­தியா வழ­மை­யாக பாட­சாலை செல்லும் பாதைக்கு சென்­றுள்ள இவர்கள் அங்கு மறைந்­தி­ருந்­துள்­ளனர்.

இதன்­போது வழமை போல பாட­சா­லைக்குச் செல்ல வித்­தியா வந்த போது ஐவரும் சேர்ந்து அவளை கடத்தி அருகில் உள்ள புதர்க்­காட்­டிற்குள் இழுத்துச் சென்று கட்­டிப்­போட்டு மாறி மாறி பாலியல் பலாத்­காரம் செய்து கொடூ­ர­மாக கொலை செய்­துள்­ளனர்.

கைதாகி பொலிஸ் தடுப்பில் உள்ள 5 சந்­தேக நபர்­களும் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­களின் பிர­காரம் அந்த 5 பேரும் சேர்ந்தே வித்­தி­யாவை பலாத்­காரம் செய்து தீர்த்துக் கட்­டி­யமை தெரிய வந்­துள்­ளது.

கைதான சந்­தேக நபர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலம் ஒன்றில்

நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கடந்த 13 ஆம் திகதி புதன்­கி­ழமை காலை புங்­கு­டு­தீவில் மது அருந்­திக்­கொண்டு இருந்தோம். அந்­த­வேளை 14 ம் திகதி வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட மூவரில் ஒருவர் எனக்கு தொலை­பே­சியில் அயிட்டம் (பொண்ணு) ஒன்று இருக்கு வா என ஒரு இடத்தை சொல்லி அழைத்தார்.

அதை­ய­டுத்து நாங்கள் அந்த இடத்­திற்கு காரில் சென்றோம். அங்கே ஒரு பெண்ணை கடத்தி பின் புற­மாக கைகள் கட்­டப்­பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய நிலையில் இருந்­தார்கள்.

அந்த பெண் எமக்கு ஒரு முறையில் உற­வினர் கூட. அந்த வேளை நாம் மது மயக்­கத்தில் இருந்­ததால் நாமும் அந்­தப்­பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு

உட்­ப­டுத்­தினோம்.

பின்னர் நாம் காரில் காலை 10 மணி­ய­ளவில் கொழும்பு நோக்கி சென்று விட்டோம். மறு­நாளே எமக்கு அந்த பெண் உயி­ரி­ழந்­துள்ளார் என்ற தகவல் கிடைத்­தது.

நாம் செல்லும் போது அந்த பெண் உயி­ரி­ழக்­க­வில்லை. அவ­ரது கைகள் பின்னால் தான் கட்­டப்­பட்டு இருந்­தது. ஆனால் பின்னர் கைகள் தலைக்கு மேல் விரித்து இரண்டு மரங்­களில் கட்­டப்­பட்­டது தொடர்பில் எமக்கு தெரி­யாது.

எமக்கு அயிட்டம் பெண் இருக்கு என்று சொல்லி அழைத்­தவர் ஏற்­க­னவே ஒரு திருட்டு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டவர்.

அவரை பொலி­சா­ரிடம் காட்டி கொடுத்­தது உயி­ரி­ழந்த பெண்ணின் தயா­ராவார். எனவே தாய் மீதான கோபத்­தி­லேயே அவர் அந்த பெண்ணை கடத்தி வன்­பு­ணர்ச்­சிக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன் எம்­மையும் அழைத்து இருந்தார்.

தாயின் மீதான கோபத்­தினால் தான் அவர் அந்த பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி கொலை செய்து இருக்­கலாம்.

அதனை அடுத்து நாம் புங்­கு­டு­தீ­வுக்கு வந்து அந்த பெண்ணின் இறுதி கிரி­யை­க­ளிலும் கலந்து கொண்டு இறுதி கிரி­யை­களில் உத­வி­க­ளையும் முன்­னின்று செய்தோம்.

அதன் பின்னர் இன்று ஞாயிறு இரவு மீண்டும் கொழும்பு நோக்கி செல்ல இருந்தோம். அந்த நிலை­யி­லேயே பொலிசார் எம்மை கைது செய்­துள்­ளனர் என குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் அந்த வாக்கு மூலத்தில் தெரி­விக்­கப்­பட்ட சில விட­யங்­களை பொலிஸார் நிரா­க­ரிக்­கின்­றனர். ஏனைய சந்­தேக நபர்­களின் வாக்கு மூலங்­க­ளுடன் ஒப்­பிடும் போது சில தக­வல்கள் முர­ணாக உள்­ள­தாக குறிப்­பிடும் பொலிஸார் சந்­தேக நபர்கள் ஐவரும் சேர்ந்து மிகத் திட்­ட­மிட்டு இந்த பாதக செயலை புரிந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மிகத் திட்­ட­மிட்டு செய்­யப்­பட்ட பாதகம் என்­பதை உறு­திப்­ப­டுத்தும் அள­வுக்கு பொலி­ஸா­ரிடம் ஆதா­ரங்கள் சிக்­கி­யுள்ள நிலையில் வித்­தி­யாவை பலாத்­காரம் செய்­த­வர்­களின் எண்­ணிக்கை மற்றும் நபர்­களை அடை­யாளம் காணவும் வேறு எவ­ரேனும் இத­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­னரா என்­பதை கண்­ட­றி­யவும் வித்­தி­யாவின் பிரே­தத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மாதி­ரி­களை மர­பணு D.N.A. பரி­சோ­த­னைக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தினம் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தேக நபர்­களின் இரத்த மாதி­ரிகள் பெறப்­பட்­டுள்­ள­துடன் அவையும் மர­பணு பரி­சோ­த­னை­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

சந்­தேக நபர்­களின் வாக்கு மூலத்­தின்­படி குஷாந்தன் கோகிலன் ஊடாக கொழும்பு நண்­பர்­களை ஒருங்­கி­ணைத்­த­தாக தெரி­கி­றது. எனினும் சந்­தேக நபர்கள் சொல்லும் தொலை­பேசிக் கதை­களை உறு­திப்­ப­டுத்த சிறப்பு பொலிஸ் குழு­வா­னது சந்­தேக நபர்­களின் தொலை­பேசி பதி­வு­களை ஆய்வு செய்து வரு­கி­றது.

இத­னை­விட சந்­தேக நபர்­களின் கைவிரல் ரேகை அடை­யா­ளங்­களும் பெறப்­பட்டு அவர்கள் இதற்கு முன்னர் வேறு குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­னரா என்­பதை ஆய்வு செய்ய கொழும்பு குற்­றப்­ப­தி­வுப்­பி­ரி­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

இந்த கொடூ­ரத்தின் பின்­ன­ணியில் வித்­தி­யாவின் தூரத்து உற­வி­னர்­க­ளான (சசேந்­திரன், குக­நாதன்) இரு­வரும் அப்­பி­ர­தே­சத்தை சார்ந்­த­வர்­க­ளுமே சம்­பந்­தப்­பட்­டுள்ள நிலையில் புங்­கு­டு­தீவு கடந்த மூன்று நாட்­க­ளாக பற்றி எரிந்து வரு­கி­றது.

சந்­தேக நபர்­களை தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறும் அவர்­களை உயி­ருடன் விட்டு வைக்­கக்­கூ­டாது எனவும் ஆவே­சத்­துடன் அலையும் பொது­மக்கள் சந்­தேக நபர் ஒரு­வரின் வீட்­டுக்கும் தீ வைத்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

யாழ். வைத்தியசாலையில் சந்தேக நபர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட அழைத்துச் சென்ற போதும் வைத்தியசாலைக்குள் கூடிய பொதுமக்கள் சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதில் பல சிக்கல்களை பொலிஸார் எதிர்கொண்டனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவுறாத நிலையில் மரபணு பரிசோதனை அறிக்கையும் தடுப்புக் காவல் விசாரணைகளும் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தலாம். இந்நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் இரான் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கிறது.

வித்தியாவின் தாய் சொன்ன சாட்சியம் இறுதியில் அவள் மகளின் உயிரையே பறித்து விட்டது. சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலான சட்டம் ஒன்றின் அவசியத்தை வித்தியாவின் படுகொலை அரசுக்கு வலியுறுத்துகிறது.

இதனை விட யாழில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த விஷேட திட்டங்களின் அவசியத்தையும் இந்த கொடூர சம்பவம் சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.

இந்த கொடூரத்தை புரிந்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் கோரிக்கை ஒரு புறமிருக்க இன்னுமொரு வித்தியாவை இழக்க முன்னர் குற்றத்தடுப்பு தொடர்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பிலும் யதார்த்தமான நடவடிக்கைகள் அவசியம்.

தூக்கு தண்டனையை அடிக்கடி ஞாபகப்படுத்தும் இவ்வாறு சம்பவங்களை அத்தண்டனையை அமுல்படுத்தியேனும் கட்டுப்படுத்த வேண்டும்

 

SHARE