யாழ் இளைஞன் மீது துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரிக்க கொழும்பிலிருந்து விசேட குழு..!

145

 

யாழ்ப்பாண மணியம்தோட்டம் உதயபுரம பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் நாளை (25) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இந்த குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டது பொலிஸார் தான் என உயிரிழந்த இளைஞருடன் வந்த நபர் தெரிவித்ததுள்ளதுடன், பொலிஸார் அதனை மேற்கொள்ள வில்லை என்று பொலிஸ் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை யார் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் இருந்து வருவதுடன், முப்படை மீதும் விசாரணைகளை முன்னெடுக்கும் முன்நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸ்மா அதிபரினால் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் நாளை (26) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE