குற்றச்செயல்களை தடுப்பதற்காக யாழில் செயற்படுத்தப்பட்ட விசேட மோட்டார்வண்டி குழுவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 30க்கும் அதிகமானோரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
அத்துடன் தொடர்ச்சியாக இக் குழுவினர் இரவு பகல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலமாக யாழ். குடாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதனையடுத்து யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபர் நா.வேதநாதன் தலைமையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது வட மாகாண பொலிஸ் மா அதிபர் பெரேரா உட்பட முக்கிய பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் இறுக்கமான கலாசார கட்டுப்பாடுகளும் நடவடிக்கையினாலும் யாழ்ப்பாணம் எவ் வித பிரச்சினைகளும் இன்றி தலை நிமிர்ந்து காணப்பட்டது.
இப்போது கலாசார சீரழிவுகளும் குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளன. எனவே தான் இக் குற்றச் செயல்களைத் தடுப்பது பொலிஸாரின் கடமையாகும் என அங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.