யாழ் நூலகத்திற்கு 50,000 புத்தகங்கள் நன்கொடை

113
(பா.திருஞானம்)
இந்திய தமிழ் நாடு அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு இலட்ச புத்தகங்களில் யாழ் நூலகத்திற்கு 50,000 புத்தங்களை வழங்கும் நிகழ்வும் வட மாகாணத்தில் தெரிவு செய்யபட்ட பாடசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை அதிபர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (18.09.2018) யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்நாடு  கல்வி பள்ளித்துறை  அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், இ.சரவணபவன், வட மாகாண ஆளுநர் ரெஜீனோல் குரே, வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர இமானுவேல் ஆர்னோட் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
SHARE