யாழ். பல்கலைகழக 2ஆம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை!

286

யாழ்.பல்கலைகழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் என காங்கேசன்துறை பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே பல்கலைகழக உள்ளக விசாரணைகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE