யுவராஜ் சிங், ரெய்னாவை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது”: ஆரோன் பின்ஞ்

280
டி20 தொடரில் இந்திய அதிரடி வீரர்களான யுவராஜ் சிங், ரெய்னாவை விரைவில் வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ஞ் கூறியுள்ளார்.இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் சிறப்பாக செயல்பட்ட போது இந்தியா ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது. இதற்கு இரு அணிகளும் தயாராக உள்ளனர்.

இந்திய அணியில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு அதிரடி வீரரான யுவராஜ் சிங் இணைந்துள்ளார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு சீனியர் வீரரான நெஹ்ராவும் உள்ளார்.

தவிர, ஒருநாள் தொடரில் இடம்பெறாத ரெய்னா டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார். இவரும் வானவேடிக்கை காட்டுவார் என்பதால் இவர்களை வீழ்த்த அவுஸ்திரேலியா திட்டம் தீட்டி வருகிறது.

இது பற்றி அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பின்ஞ் கூறுகையில், “இந்திய அணியில் பல அனுபவ வீரர்கள் உள்ளனர். உலகக்கிண்ண தொடரில் இங்கு 2 மாதங்கள் விளையாடியதன் மூலம் அனைவருக்கும் சிறந்த அனுபவம் கிடைத்துள்ளது.

மேலும், அந்த அணியின் முன்னணி வீரர்களான யுவாரஜ் சிங், சுரேஷ் ரெய்னாவை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது. சீனியர் வீரர்கள் அணியில் இருக்கும் போது அணியில் ஒருவித அமைதி நிலை இருக்கும்.

ஏனெனில் போட்டியை எவ்வாறு முடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் இளம் வீரர்களை கொண்ட அணியில் ஒருவித பதற்றம் இருக்கும்.

சீனியர் வீரர்கள் சிறந்த நிலையில் இருக்கும் போது வயதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களை அணியில் இணைத்து கொள்வதில் தவறில்லை” என்று கூறியுள்ளார்.

SHARE