ரஷ்ய நாட்டில் 15 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் suburb of Sochi ரயில் நிலையத்தில், Yekaterina என்ற பள்ளி மாணவி தனது வீட்டிற்கு திரும்புவதற்காக சகோதரனோடு நின்றிருந்துள்ளார்.
அப்போது, மாணவியின் சகோதரன், ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாலத்திற்கு அருகில் தண்ணீர் ஓடுவதை பார்ப்பதற்காக நில நிமிடங்கள் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில், வாலிப நபர் ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக தண்டவாளத்திற்கு இழுத்து வருகிறார், அந்நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக மாணவி முயற்சி செய்கிறார்.
ஆனால், மாணவியின் தலையில் பயங்கரமாக தாக்கும் அந்நபர், அதன்பின்னர் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுகிறார்.
தண்ணீரை ரசித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் சகோதரன், ரயில் நிலையத்தில் தனது சகோதரி இல்லாததைகண்டு, எதிரே வந்த இந்த குற்றவாளியிடமே எனது தங்கையை பார்த்தீர்களா என கேட்டுள்ளான். ஆனால் அவனோ பதில் எதுவும் அளிக்காமல் சென்றுள்ளான்.
இதனைத்தொடர்ந்து, 2 நாட்களுக்கு பிறகு பாலத்திற்கு அடியில் பிணமாக பள்ளி மாணவி மீட்கப்பட்டுள்ளார், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட காட்சி அங்கிருந்த ரயில் நிலையத்தில் பதிவாயிருந்ததால் குற்றவாளியை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.