லண்டனில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

158

மே18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனொரு அங்கமாக, பிரித்தானியாவில் இரத்ததான நிகழ்வொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் வரையிலான விழிப்புரை போராட்டம் ஒன்றும் உந்துருளியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இரத்ததான நிகழ்வு, மே16 ஆம் திகதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை Edgware Blood Donor Center, community Hospital, Burnt Oak Brodway, Edgware, HA8 0AD எனும் முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மே12ஆம் திகதி அன்று தொடங்கிய விழிப்புரை போராட்டம், உணர்வெழுச்சியுடன் லண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமர் வாயில் தளம் நோக்கி உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE